குடியரசு தினத்தன்று வேலை 131 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் ஆணையர் அதிரடி
2023-01-29@ 00:59:11

சென்னை: சென்னை 2வது வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் நலத்துறை அரசு செயலாளரும், தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் ஆணைக்கிணங்க, சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி மற்றும் சென்னை தொழிலாளர் இணை ஆணையர் விமலநாதன் அறிவுரைப்படி, குடியரசு தின விடுமுறை நாளான கடந்த 26ம் தேதி கடைகள் மற்றும் உணவு, மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
பணிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்றுவிடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய தொழில் 173 நிறுவனங்களில் இந்த சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 131 நிறுவனங்கள் முறையாக அறிவிப்பு வழங்கி முன்அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது. அந்த நிறுவன உரிமையாளர்களுக்கு சட்டப்படியான அறிவிப்பு வழங்கி மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து 171 நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு செய்ததில், 150 நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags:
REPUBLIC DAY JOB 131 COMPANY OWNERSHIP LABOR COMMISSIONER குடியரசு தின வேலை 131 நிறுவன உரிமையாளர்கள் தொழிலாளர் ஆணையர்மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்