தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் குரூப் 3ஏ தேர்வை 98,807 பேர் எழுதினர்: டிஎன்பிஎஸ்சி தகவல்
2023-01-29@ 00:52:24

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், தமிழ்நாடு அரசின் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர் நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 14 கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர், ஒரு தொழில் வர்த்தகத்துறை பண்டக காப்பாளர் பணியிடத்துக்கு தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்பட்டது. கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில் வர்த்தகத்துறை பண்டக காப்பாளர் பணியிடத்துக்கு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு ரூ.20,600 முதல் ரூ.75,900 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 2 பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி பொதுத் தமிழ். இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். குறைந்தபட்ச மதிப்பெண்கள் 60. 2ம் பகுதி பொது அறிவு. இதில் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இந்த பணியிடங்களுக்கான தேர்வு, தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மொத்தம் 334 மையங்களில் நேற்று தேர்வு நடைபெற்றது. 98,807 பேர் நேற்று தேர்வு எழுதினர். சென்னையில் 37 மையங்களில் நடைப்பெற்ற தேர்வில் 10,841 பேர் தேர்வு எழுதினர்.
Tags:
In Tamil Nadu 98 807 candidates wrote the 15 district Group 3A exam TNPSC தமிழ்நாட்டில் 15 மாவட்ட குரூப் 3ஏ தேர்வை 98 807 பேர் எழுதினர டிஎன்பிஎஸ்சிமேலும் செய்திகள்
நிதிநிலை அறிக்கையில் ஊக்குவிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் வேளாண்மை தொழில் புத்தாக்கம் பெறும்: தலைவர்கள் வரவேற்பு
ரூ.2.13 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் ராயபுரம் மாடிப்பூங்கா: விரைவில் திறக்க ஏற்பாடு
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சர்வதேச தரச்சான்று
கிண்டி மேம்பாலத்தில் விபத்து லாரியிலிருந்து டீசல் கசிந்து சாலையில் வழிந்தோடியது
மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
போரூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!