ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேதி மாற்றம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
2023-01-29@ 00:48:02

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளுக்கான தேதியை மாற்றம் செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தாள்-1 தேர்வு, கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 2 லட்சத்து 30 ஆயிரத்து 87 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு முடிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதில் தேர்வை எழுதிய ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 23 பேரில், 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதனைத் தொடர்ந்து தாள் இரண்டுக்கான தேர்வை எழுத 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களுக்கான தேர்வு வருகிற 31ம் தேதி முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12ம் தேதி வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே கடந்த 3ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த தேதியில் மாற்றம் செய்து இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை கணினி வாயிலாக 2 கட்டங்களாக தேர்வு நடத்த இருப்பதாக கூறி அதற்கான அட்டவணையையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது. தேர்வு எழுதுபவர்களுக்கான ஹால்டிக்கெட் 2 கட்டங்களாக வழங்கப்பட உள்ளது.
எந்த மாவட்டங்களில் தேர்வு எழுத போகிறார்கள் என்ற விவரத்துடன் முதல் ஹால்டிக்கெட்டும், தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு தேர்வு மையங்கள் குறித்த விவரத்துடன் மற்றொரு ஹால்டிக்கெட்டும் வெளியிடப்படுகிறது. இதில் முதல் ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கு விண்ணப்பித்தவர்களில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணித்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தடைவிதிக்கப்பட்ட 9 பேர், தாள்1 தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதிய 2 பேர், பெயரை தவறாக பதிவு செய்த 10 பேர் என 30 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன.
Tags:
Teacher Eligibility Test Second Paper Date Change Teacher Examination Board ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளு தேதி மாற்றம் ஆசிரியர் தேர்வு வாரியம்மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம்
தமிழகத்தில் இந்த ஆண்டு ஈரோட்டில் 102 டிகிரி வெயில்: அதிகபட்சமாக பதிவானது
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: பொது, வேளாண்மை பட்ஜெட் 3ம் நாள் விவாதம் நடக்கிறது
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய மக்கள் ஆதரவு தர வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
போராட்டம் நடத்தினால் சம்பளம் ‘கட்’: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி