அரசு பேருந்து மோதி கோயில் குதிரை உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்
2023-01-28@ 19:13:28

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி பச்சைவாழி அம்மன் கோயிலுக்கு சொந்தமான குதிரை உயிரிழந்ததால் பக்தர்கள் சோகத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கொணலவாடி கிராமம். இந்த கிராமத்தில் பழமையான பச்சைவாழி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர் ஒருவர் கடந்த வருடம் குதிரை ஒன்று நேர்த்திக் கடனாக வழங்கினார்.
இந்த குதிரை கோயில் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை இந்த வழியாக சென்ற அரசு கிராமப்புற பேருந்து குதிரை மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட குதிரை அருகில் உள்ள வயல்வெளி பகுதியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து திரண்டதால் கொணலவாடி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பச்சைவாழி அம்மன் கோயிலுக்கு சொந்தமான குதிரை அரசு பேருந்து மோதி உயிரிழந்ததால் பக்தர்கள் சோகத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!