ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க மும்முரம்
2023-01-28@ 17:58:53

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும் பணப்பட்டுவாடாவை தடுக்கவும் தேர்தல் ஆணையம் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. தொகுதிக்குள் வரும் வாகனங்களை எல்லைகளிலேயே நிறுத்தி 4 நிலை கண்காணிப்பு குழுவினர் தணிக்கை செய்து வருகின்றனர்.
அதேபோன்று தொகுதி முழுவதும் அங்காங்கே வாகனங்களில் 3 பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். வழக்கத்திற்கு மாறான சதேகத்திற்கிடமான பணபரிவர்த்தனைகள் நடந்தால் தேர்தல் அதிகாரிகளிடம் வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் பரப்புரைக்கும், பொது கூட்டத்திற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால் தொகுதிக்கு வெளியே புறநகர் பகுதிகளில் நிர்வாகிகள் கூட்டங்களை அரசியல் கட்சியினர் நடத்தி வருகின்றனர். இதனிடையே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அருந்ததியர் இளைஞர் பேரவை ஆதரவு அளித்துள்ளது.
மேலும் செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தை சுகாதார துறை அதிகாரி ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி