விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
2023-01-28@ 01:35:40

சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி அணிந்திருந்த 2 ஷூக்களிலும் காலணி வடிவத்தில் தங்க தகடுகளை, கருப்பு கலர் டேப் ஒட்டி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதில் 1.45 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.67 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்தனர்.
இதேபோல், துபாயிலிருந்து பிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்த 2 ஆண் பயணிகள் உடமைகளை சோதித்த போது, லேப்டாப் சார்ஜர்கள் எடுத்து வந்திருந்தனர். அந்த சார்ஜர் பின்கள் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. அந்த பின்களில் இருந்த 560 கிராம் தங்கத்தையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.28 லட்சம். இரண்டு துபாய் விமானங்களில் ரூ. 95 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, 3 பயணிகளை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து பெண் பலாத்காரம் நிறுவன அதிகாரிக்கு 10 ஆண்டு சிறை
பிளஸ்2 மாணவியை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர்: விசாரணையின் போது எஸ்கேப்
ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி முக்கிய குற்றவாளியான பாஜ நிர்வாகி ஹரிஷ் கைது: ரகசிய இடத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
சிறுவனுக்கு செக்ஸ் டார்ச்சர் வாலிபர் போக்சோவில் கைது: உடலில் கடித்து காயப்படுத்திய கொடூரம்
ரவுடியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி