செல்போன் பறித்த 2 பேர் கைது
2023-01-28@ 01:24:54

திருவொற்றியூர்: எர்ணாவூர் கன்னிலால் லே அவுட் பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் ராஜேஷ் (50), நேற்று முன்தினம் எர்ணாவூர் மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர், ராஜேஷ் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர். மாதவரம் தபால் பெட்டி தெருவை சேர்ந்த இன்ஜினியர் சமியுல்லா (49), வடசென்னை அனல் மின் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர், பணி முடிந்து எர்ணாவூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர், சமியுல்லா செல்போனை பறித்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து 2 பேரும் தனித்தனியாக எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த வசந்த் (23), டில்லிபாபு (27) ஆகிய 2 பேர் செல்போன் பறித்தது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல்
புளியந்தோப்பில் போதைப்பொருள் கடத்தல் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சினிமா பைனான்சியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் கைது
கொள்ளை போனதாக பொய் புகார் 3 கிலோ தங்க நகையுடன் ஊழியர்கள் பிடிபட்டனர்
ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து ரஜினி வீட்டிலும் கைவரிசை புகார் அளித்ததோ 60 சவரன்; பறிமுதலோ ரூ. 3 கோடி நகைகள்: வேலைக்கார பெண், கார் டிரைவரிடம் விடிய விடிய விசாரணை
போலி பெண் டாக்டர் கைது
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!