அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வார கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி: ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு
2023-01-27@ 02:04:38

சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறையின் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு அடையாறு ஆறு கடலில் சேரும் பகுதி முதல் திரு.வி.க பாலம் வரையிலான பகுதிகளை அகலப்படுத்தி தூர்வாரும் பணியை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை முடிவு செய்ப்பட்டது. அடையாறு ஆற்றில் நீரின் போக்கு மற்றும் அது தாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தப் பகுதி சதுப்பு நிலங்களுக்கு அருகிலும், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் உள்ளதால், ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டிய நிலை இருந்தது. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை இது தொடர்பான திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழ்நாடு கடலோர ஒங்குமுறை ஆணையத்தின் அனுமதியை பெற்று மத்திய கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்திற்கு அனுப்பியது. இந்நிலையில், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறையின் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறையின் திட்ட அறிக்கை 2021ம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டது. ஒன்றிய சுற்றுசூழல் அமைச்சகத்தில் இந்த திட்டம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக வல்லுனர் குழு அமைத்து கடந்த ஆண்டு மார்ச், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆலோசனை நடத்தப்பட்டது. அடையாறு முகத்துவார பகுதி அதிகளவில் மாசடைந்துள்ளது என வல்லுனர் குழு கண்டறிந்தது.
அதனை மாசுக் கட்டுப்பாட்டு வரியம் உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகளிடம் தகவல் பெற்று உறுதி செய்தது. மேலும் தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை அடுத்து, வல்லுனர் குழுவின் அறிக்கையின் படி ஒன்றிய சுற்றுசூழ்ல் அமைச்சகம் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.21.63 கோடி மதிப்பீட்டில் திரு.வி.க. பாலம் முதல் அடையாறு ஆறு, கடலில் கலக்கும் இடம் வரை, அலையாத்தி தாவரங்கள் இருக்கும் இடம், தீவுகள் உள்ள இடம் தவிர்த்து 176.35 ஏக்கர் பரப்பளவில் தூர்வாரப்படவுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மின் வேலியில் சிக்கி யானைகள் பலியாகும் விவகாரத்தில் அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: காவல்துறை ஐகோர்ட்டில் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!