முதல் முறையாக `பழங்குடி பொக்கிஷங்கள்’ நடமாடும் வாகனத்தில் விற்பனை
2023-01-27@ 00:56:20

நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் காணி பழங்குடியினர் பொருட்களை வெளி இடங்களுக்கு கொண்டு சென்று விற்கவும், நெல்லை மாவட்ட நிர்வாகமும், போஸ் நிறுவனமும் இணைந்து சுமார் ரூ.17 லட்சம் மதிப்பில் நடமாடும் விற்பனை வாகனத்தை புதிய முறையில் வடிவமைத்து இலவசமாக வழங்கி உள்ளனர். பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவின்போது `பழங்குடி பொக்கிஷங்கள்’ என்ற நடமாடும் விளைபொருள் விற்பனை வாகனத்தை கலெக்டர் விஷ்ணு, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வனப்பகுதியில் கிடைக்கும் தேன், மிளகு, காந்தாரி மிளகாய், நெல்லி, போன்ற 64 விளை பொருட்கள் மற்றும் இந்த விளை பொருட்களில் இருந்து கூடுதலாக தயாரிக்கும் பொருட்கள் என 110 பொருட்கள் இந்த நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இது, தமிழ்நாட்டில் முதன் முறையாக நெல்லையில் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் டிஜிபி, ஐஜி அதிரடி ஆய்வு
கைத்தறி பெட்ஷீட்டில் ஒருபுறம் தோனி மறுபுறம் விராட் கோலி உருவப்படம்: நெசவாளர் அசத்தல்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பலி: உரிமையாளர் சிறையில் அடைப்பு
செங்கல்பட்டு அருகே புக்கத்துறை - உத்திரமேரூர்சாலையை இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுவதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
திருச்சில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு
நாங்குநேரி - மேலப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி