பாஜ வளரவில்லை அதிமுகவின் நிலைமைக்கு டெல்லிதான் காரணம்: போட்டு உடைத்த டிடிவி
2023-01-27@ 00:53:44

புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்திய பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போது உள்ள நடைமுறையை பார்த்தால் இந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பது போல் தெரியவில்லை.
அதிமுக இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு டெல்லி மேலிடம் தான் காரணம். மீண்டும் அதிமுக ஒன்று சேர்வது அவர்கள் நினைத்தால் மட்டுமே முடியும். அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக பாஜக தலைமை என்னை அழைத்தால் அப்போது அது குறித்து நான் முடிவெடுப்பேன். பாஜக வளர்ந்து வருகிறது என்று சொல்ல முடியாது. ஒரு கட்சி வளர்வது மக்களின் கையில் தான் உள்ளது. கமல்ஹாசன் ஏற்கனவே காங்கிரசுடன் செல்வதற்கு முடிவெடுத்துவிட்டார். அதனால் தான் ராகுல் காந்தி நடை பயணத்தில் கலந்து கொண்டார். தற்போது அதை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் டிஜிபி, ஐஜி அதிரடி ஆய்வு
கைத்தறி பெட்ஷீட்டில் ஒருபுறம் தோனி மறுபுறம் விராட் கோலி உருவப்படம்: நெசவாளர் அசத்தல்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பலி: உரிமையாளர் சிறையில் அடைப்பு
செங்கல்பட்டு அருகே புக்கத்துறை - உத்திரமேரூர்சாலையை இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுவதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
திருச்சில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு
நாங்குநேரி - மேலப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி