கோயில்களில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை
2023-01-27@ 00:52:49

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். முதலில் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், கோயில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதிக்கும் சென்று தரிசனம் செய்தார். இதன்பிறகு திருவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பு பகுதியில் உள்ள தனது குலதெய்வ கோயிலான வனபேச்சி அம்மன் கோயிலுக்கு சென்றார்.
அங்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நான் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்ய வந்தேன். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் எனது சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். வேட்பு மனுவே 31ம் தேதி முதல்தான் துவங்க உள்ளது’’ என்றார்.
மேலும் செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் டிஜிபி, ஐஜி அதிரடி ஆய்வு
கைத்தறி பெட்ஷீட்டில் ஒருபுறம் தோனி மறுபுறம் விராட் கோலி உருவப்படம்: நெசவாளர் அசத்தல்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பலி: உரிமையாளர் சிறையில் அடைப்பு
செங்கல்பட்டு அருகே புக்கத்துறை - உத்திரமேரூர்சாலையை இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுவதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
திருச்சில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு
நாங்குநேரி - மேலப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி