3,900 பேர் பணி நீக்கம் ஐபிஎம் நிறுவனம் அறிவிப்பு
2023-01-27@ 00:39:12

வாஷிங்டன்: முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் 3900 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. உலகமெங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே மைக்ரோசாஃப்ட், அமேசான், கூகுள், சாஃப்டிபை, மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்த மென்பொருள் வல்லுநர்கள்.
இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்(ஐபிஎம்) நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது. மொத்தம் 3900 பேர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 1.5 சதவீதம். ஐபிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் அதிகம் பேர் வேலை இழப்பார்கள் . தொடரும் பணி நீக்க அறிவிப்பால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகள்
லண்டன் விழாவில் இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட ரயில் மாதிரிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்த மக்கள்
வியட்நாமில் ஏழு டன் யானை தந்தங்கள் சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த நிலையில் பறிமுதல்..!!
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் தலைகீழாக தரையில் விழுந்து தீப்பிடித்தது .. 4 பேர் உயிரிழப்பு!!
சீனாவின் விரைவான வளர்ச்சியை பற்றி சற்று பொறாமை கொள்கிறேன் : அதிபர் ஜின்பிங்கிடம் ரஷ்ய அதிபர் புதின் பேச்சு!!
காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் லண்டன் இந்திய தூதரகத்தில் தேசியக்கொடி அவமதிப்பு
மேலும் 9,000 ஊழியர்களை பணி நீக்க அமேசான் முடிவு
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!