இன்று முதல் டி20 ராஞ்சி களத்தில் இந்தியா-நியூசி
2023-01-27@ 00:31:58

ராஞ்சி: இந்தியா வந்துள்ள நியூசி அணி முதலில் 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களிலும் வென்று, நியூசியை ஒயிட் வாஷ் செய்தது. இந்நிலையில் 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் களம் காண உள்ளன. முதல் ஆட்டம் இன்று இரவு ராஞ்சியில் நடக்கிறது. நியூசி அணி, டி20 தொடரில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலும், இந்தியா அணி ஹர்திக் பாண்டிய தலைமையின் கீழும் விளையாட உள்ளன. ஒருநாள் ஆட்டத்தில் விளையாடிய இந்திய வீரர்கள் கேப்டன் ரோகித், கோஹ்லி, ஷமி, சிராஜ், நியூசி அணியில் கேப்டன் டாம் லாதம், நிகோலஸ், டக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
நியூசி அணியில் தனியாக பேட்ஸ்மேன்கள் என்று யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை. விக்கெட் கீப்பர்கள், ஆல்ரவுண்டர்கள் மட்டும் இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள உள்ளனர்.
இந்திய அணியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பிரித்வி ஷா 2வது டி20யில் விளையாட உள்ளார். கூடவே முகேஷ் குமார், ஜிதேஷ் சர்மா ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த முறையும் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம். சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம். ஆனால் ஒருநாள் தொடரை இழந்த நியூசி டி20 தொடரில் சாதிக்க கூடுதல் வேகம் காட்டும்.
மேலும் செய்திகள்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக ஷ்ரேயாஸ் விலகல்: சிக்கலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
2-1 என ஒரு நாள் தொடரை இழந்ததால் தரவரிசையில் முதல் இடத்தை இழந்த இந்தியா: ஆஸ்திரேலியா நம்பர் 1 இடத்தை பிடித்தது
உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்: நடராஜனுக்கு வாய்ப்பு
ஐபிஎல் கோப்பை ஆர்சிபி அணிக்குதான்: ஸ்ரீசாந்த் சொல்கிறார்
ஆஸ்திரேலியாவுடனான 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்தார் சூரியகுமார் யாதவ்
பதக்கம் உறுதி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!