காயத்ரி ரகுராமை தொடர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பா.ஜ.வில் இருந்து விலகல்
2023-01-08@ 00:57:31

சென்னை: நடிகை காயத்ரி ரகுராமை தொடர்ந்து, பாஜவில் இருந்து விலகுவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் அறிவித்துள்ளார். தமிழக பாஜவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் முன்னாள் தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 3ம் தேதி பாஜவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அப்போது, அவர் ‘‘பாஜவில் அண்ணாமலை இணைந்த பிறகு தான் வீடியோ, ஆடியோ கலாசாரம் வந்தது. பாஜவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அண்ணாமலை மலிவான பொய் பேசும், அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவர். நான் பாஜவில் இருந்து விலகுவதற்கு அண்ணாமலையே காரணம். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பெண்களே நீங்களே உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். மரியாதை இல்லாத இடத்தில் பெண்கள் தொடர்ந்து இருக்கக்கூடாது. என்னிடம் உள்ள ஆடியோ, வீடியோக்கள் என அனைத்து ஆதாரங்களையும் போலீசிடம் வழங்கி, அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று புகார் அளிப்பேன்’’ என்று அவர் தெரிவித்தார். நடிகை ஒருவரின் பரபரப்பு குற்றச்சாட்டு பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்த பாஜ தலைவர் அண்ணாமலை, ‘‘என் மீது புகார் சொல்லாதவர்கள் யாரும் இல்லை.
காயத்ரி ரகுராமின் புகாரையும் அப்படி தான் எடுத்து கொள்வேன்’’ என்று மட்டும் தெரிவித்தார். நடிகை காயத்ரி ரகுராமின் பிரச்னை முடிவுக்கு வருவதற்குள், மற்றொரு நடிகையும்,இயக்குனருமான பாஜவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதாவது பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தான் தற்போது பாஜவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதில், ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் விலகுவதாக’வும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாஜவில் இருந்து பாதுகாப்பு இல்லை என்று கூறி பெண்கள் வெளியேறுவது தற்போது பாஜவில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு 50% கட்டணச் சலுகை: அமைச்சர் சிவசங்கர் தகவல்
ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAIக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம்.!
தொல்லியல் துறை அனுமதி, மண்டலக்குழு அனுமதி, மாநிலக் குழு அனுமதி பெற்று 16 பணிகள் ரூ.5.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன: தமிழ்நாடு சட்டபேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
ரூ.730.87 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மது அருந்தாதவரை மது அருந்தியதாக காட்டிய பிரீத் ஆனலைசர் மிஷின்: சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்
ஆவின் தயிரில் தாஹி என இந்தியில் பெயர் அச்சிடப்படாது: பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!