முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடம்
2022-12-10@ 00:54:40

புதுடெல்லி: முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடம் இருப்பதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்தது. மக்களவையில் நேற்று ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பேசுகையில், ஒன்றிய அரசின் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் எதுவும் வீணாகவில்லை. தடுப்பூசிகள் விரையம் ஆகாமல் இருக்க தடுப்பூசிகளின் காலாவதி தேதி போன்ற விவரங்களை அரசு தொடர்ந்து பராமரித்து வருகிறது என்று கூறினார்.
5 ஜி சேவை: நாட்டில் உள்ள 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5 ஜி தொலைதொடர்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று தொலை தொடர்பு துறை அமைச்சர் தேவுசிங் சவுகான் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
முப்படைகளில் காலியிடங்கள்: ராணுவம், கடற்படை, விமான படைகளில் மொத்தம் 1.35 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது என பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
பாரம்பரிய விளையாட்டுகள்: பாரம்பரிய விளையாட்டுகள் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும் என்றும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நாடு முழுவதும் 1000 கேலோ இந்தியா மையங்கள் திறக்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் மக்களவையில் நேற்று கூறினார்.
மேலும் செய்திகள்
திருப்பதியில் 8 மணிநேரத்தில் ஏழுமலையான் தரிசனம்
இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்
ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்
ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா
தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்
ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!