மாணவிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
2022-12-09@ 16:39:54

தஞ்சை: தஞ்சையில் 16 வயதான பிளஸ் 1 மாணவி கடந்த 12-8-2021ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். காணாமல் போன மாணவி ஈரோட்டில் உள்ள ஒரு வீட்டில் இருப்பது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் ஈரோட்டுக்கு சென்று மாணவியை மீட்டு தஞ்சை அழைத்து வந்தனர். பின்னர் மாணவியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆட்டோ டிரைவர் தஞ்சை மானோஜிப்பட்டி கன்னியம்மாள் நகரை சேர்ந்த பாண்டியன்(25) கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று, நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு அளித்தார்.
பாண்டியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
மேலும் செய்திகள்
இன்ஸ்டாகிராமில் காதலித்து மணந்த 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை: மலையில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன் அதிரடி கைது
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை
சென்னை அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் பலி மேலும் ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!