வீட்டில் மாவா தயாரித்து விற்ற கணவன், மனைவி கைது
2022-12-09@ 15:33:52

பெரம்பூர்: சென்னை எம்கேபி நகர் 17வது குறுக்கு தெரு பகுதியில் ஒரு வீட்டில் மாவா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே எஸ்ஐ ராஜேஷ் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தபோது, 2 கிலோ மாவா மற்றும் மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் ஜர்தா 3 கிலோ, சீவல் 4 கிலோ மற்றும் மிக்ஸி உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து வீட்டில் இருந்த ஆறுமுகம் (42), அவரது மனைவி கனக புஷ்பம் (36) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், வீட்டிலேயே மாவா தயாரித்து வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் விற்றது தெரியவந்தது. பின்னர் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
இன்ஸ்டாகிராமில் காதலித்து மணந்த 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை: மலையில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன் அதிரடி கைது
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை
சென்னை அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் பலி மேலும் ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!