பள்ளி வேன் மீது கார் மோதி 2பேர் பலி: 3பேர் படுகாயம்
2022-12-09@ 15:24:35

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 7.30 மணியளவில் தனியார் பள்ளி வேன் சாலையோரம் நின்றுகொண்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற பள்ளிவேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், இடிபாடுகளில் சிக்கியிருந்த 5பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திலேயே ஜெபராஜ் ஐசக்(65) என்பவர் உயிரிழந்து இருப்பது தெரிந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பெண் ஒருவர் இறந்தார். மற்ற 3பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு பக்தர்கள் வெள்ளத்தில் ரதசப்தமி தீர்த்தவாரி
தேன் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வழக்கு: காதி வாரியம் பரிசீலிக்க உத்தரவு
நாஞ்சில் சம்பத்திடம் அமைச்சர் நலம் விசாரித்தார்
புதுவையில் 30, 31ம் தேதிகளில் ஜி20 மாநாட்டுக்காக 5 இடங்களில் 144 தடை
தர்மபுரி அருகே அட்டகாசம் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!