முகப்பேரில் பட்டப்பகலில் பயங்கரம்; பியூட்டி பார்லருக்குள் புகுந்து ஊழியர்களை கத்தியால் வெட்டி நகை, பணம் பறிப்பு: 10 பேர் கும்பலுக்கு வலை
2022-12-09@ 15:23:03

அண்ணாநகர்: சென்னை முகப்பேர், எஸ்எம்டி நகரில் ஒரு தனியார் பியூட்டி பார்லர் இயங்கி வருகிறது. இங்கு 5 பெண்கள், 5 ஆண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு, நேற்றிரவு பட்டாக்கத்திகளுடன் 10 பேர் மர்ம கும்பல் திடீரென புகுந்தது. அவர்களை பார்த்ததும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பெண் ஊழியர்களை பட்டாக்கத்தியால் சரமாரியாக தாக்கினர். காயம் ஏற்பட்டது. இதில் பயந்து போன ஆண் ஊழியர்களிடம், நகைகள், பணம், செல்போன்களை தரும்படி மர்ம கும்பல் மிரட்டியது. உடனே 5 சவரன் நகைகள், 10 செல்போன்கள் மற்றும் கல்லாவில் இருந்த ₹15 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தது. பின்னர் அக்கும்பல் 3 பைக்குகளில் தப்பி சென்றது.
தகவலறிந்து திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன் தலைமையில் நொளம்பூர் போலீசார் விரைந்தனர். ஊழியர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். புகாரின்பேரில் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேர் கும்பலை தனிப்படை அமைத்து தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
இன்ஸ்டாகிராமில் காதலித்து மணந்த 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை: மலையில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன் அதிரடி கைது
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை
சென்னை அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் பலி மேலும் ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!