ரவுடிகளிடமிருந்து பறிமுதல் செய்த 34 நாட்டு வெடிகுண்டுகள் அழிப்பு: கொடுங்கையூரில் பரபரப்பு
2022-12-09@ 15:21:39

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் கடந்த 3ம் தேதி கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி காரில் சுற்றிதிரிந்த வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற வெள்ளை பிரகாஷ் (31), ரெட்கில்ஸ் பகுதியை சேர்ந்த விக்ரமாதித்தன் (37) ஆகியோரை மடக்கி பிடித்தனர். காரை சோதனை செய்தபோது அதில் 34 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பாம் சரவணன் என்ற ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. இவர்களை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடியபோது கை, கால் உடைந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 34 நாட்டு வெடிகுண்டுகளும் கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் புதைத்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று எம்கேபிநகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மேற்பார்வையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார், மருதம் கமாண்டோ வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து வெடிகுண்டுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதனை யாருமில்லாத பகுதியில் வெடிக்க செய்து அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்கள் கூறுகையில், ‘பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், வெள்ளை கல்லு, ஆணி பால்ஸ், சல்பர் உள்ளிட்ட பொருட்கள் மூலம் நாட்டு வெடிகுண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுஇடத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்திருந்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும். இந்த வெடிகுண்டு பிற்காலத்தில் யார் கையிலாவது கிடைத்தால் தவறாக பயன்படுத்துவார்கள். இதை வெடிக்க செய்து அழிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
மேலும் செய்திகள்
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி
இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
பிரபல இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!