பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
2022-12-09@ 00:14:31

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை தேவன்நகர் பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 மாணவி கடந்த 2021ஆகஸ்ட் 12ம்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீசில் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நடத்திய விசாரணையில், காணாமல் போன மாணவி ஈரோட்டில் மீட்டனர். ஆட்டோ டிரைவரான தஞ்சாவூர் மானோஜிப்பட்டி கன்னியம்மாள் நகரை சேர்ந்த பாண்டியன்(25) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாண்டியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
Tags:
Plus 1 student sexual harassment auto driver 20 years in jail பிளஸ் 1 மாணவி பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறைமேலும் செய்திகள்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய ஐடி பெண்: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்
ராஜஸ்தானில் இருந்து ராணுவ அதிகாரி என்று கூறி கூகுள் பேவில் பெண்ணிடம் 1.60 லட்ச ரூபாய் சுருட்டல்
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: வாலிபர் கைது
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!