கைலாசநாதர் கோயிலில் உரிமை கொண்டாடும் ஓபிஎஸ் குடும்பம்: தேனி கலெக்டர், எஸ்பியிடம் எம்எல்ஏ புகார்
2022-12-09@ 00:14:25

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் மலையின் மேல் கைலாசநாதர் கோயில் காலங்காலமாக கைலாசபட்டியை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கோயிலை பராமரித்து வந்தனர். கடந்த 2011ம் ஆண்டு கோயில் புனரமைக்கப்பட்ட பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் மூலமாக தன்னார்வக்குழு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக ஓபிஎஸ் குடும்பத்தினரே இக்கோயில் விழாக்களில் முன்னுரிமை பெற்று வருகின்றனர். இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை வசமானது. கடந்த 6ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவில், பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் மற்றும் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, அரசு முறைப்படி மரியாதை செலுத்தப்பட வேண்டிய எம்எல்ஏ சரவணக்குமாருக்கு பரிவட்டம் கட்டாமல், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பிற்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்திருந்த குருக்கள் பரிவட்டம் கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வனுடன் சென்று, கலெக்டர் முரளீதரன், எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் நேற்று புகார் மனு அளித்தார். மனுவில், ‘கைலாசநாதர் கோயிலானது தொட்டியநாயக்கர் சமூகத்தினரால் பராமரிக்கப்பட்டது. இக்கோயிலை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களுக்கு சொந்தமானது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி கடந்த பல ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்தில் தலையிட்டு வருகின்றனர். இக்கோயிலின் பூசாரியாக இருந்த நாகமுத்து தற்கொலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிக்கு தொடர்பிருப்பதாக வழக்கு நிலுவையில் உள்ளது. ஓபிஎஸ் மகன் உள்ளிட்ட தன்னார்வ குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் உள்ளது.
Tags:
Kailasanathar Temple Ownership OPS Family Theni Collector SP MLA Complaint கைலாசநாதர் கோயில் உரிமை ஓபிஎஸ் குடும்பம் தேனி கலெக்டர் எஸ்பி எம்எல்ஏ புகார்மேலும் செய்திகள்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா
தண்ணீர் வரத்து குறைந்ததால் கவியருவி மூடப்பட்டது
கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது; களக்காடு பகுதியில் 20 வகையான நீர் பறவைகள்
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்
தாளவாடி மலைப் பகுதியில் மின் கம்பத்தை சேதப்படுத்திய காட்டு யானை: சிசிடிவி வீடியோ பரபரப்பு காட்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!