நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு
2022-12-09@ 00:14:23

மதுரை: சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கரூரில் நூற்றாண்டு பழமையான கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
கோயிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. நிலத்தை மீட்டால், கோயிலின் வருமானத்தை அதிகரிக்க முடியும். ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்டு கோயிலின் வளர்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் கிளை, கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதில், சம்பந்தப்பட்டவர்கள், ஐகோர்ட் கிளையை நாடி உரிய தீர்வு காணலாம் என உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், தங்களின் கருத்துக்களை அறியாமல் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டதாகக் கூறி 39 பேர் மனு செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘‘கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலின் நிலத்தில் தற்போது இருப்பவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். அவர்கள் தரப்பில் விளக்கமளிக்க வாய்ப்பளித்து, அதற்குரிய ஆவணங்களையும் தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், ஆக்கிரமிப்பை அகற்ற 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நில ஆக்கிரமிப்புகள் குறித்து கடந்த 2018 முதல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாமல் அலட்சிய போக்குடன் நடந்துள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய துறைரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.
Tags:
Court Officers Departmental Proceedings iCourt Branch நீதிமன்ற அதிகாரிகள் துறை நடவடிக்கை ஐகோர்ட் கிளைமேலும் செய்திகள்
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு பக்தர்கள் வெள்ளத்தில் ரதசப்தமி தீர்த்தவாரி
தேன் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வழக்கு: காதி வாரியம் பரிசீலிக்க உத்தரவு
நாஞ்சில் சம்பத்திடம் அமைச்சர் நலம் விசாரித்தார்
புதுவையில் 30, 31ம் தேதிகளில் ஜி20 மாநாட்டுக்காக 5 இடங்களில் 144 தடை
தர்மபுரி அருகே அட்டகாசம் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!