புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 79 பேர் கைது
2022-12-09@ 00:06:13

சென்னை: சென்னையில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலைக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 79 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராகவும், குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிராகவும், ஒரு நாள் சிறப்பு தணிக்கையில் நேற்று முன்தினம் போலீசார் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் இதர இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர். 90 வலிநிவாரண மாத்திரைகள் மற்றும் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 76 பேர் கைது செய்யப்பட்டனர். 29 கிலோ, 13 கிராம் குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 2,082 சிகரெட் மற்றும் பணம் ரூ.980 பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரே நாளில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 403 குற்றவாளிகள் நேரில் சென்று கண்காணித்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. 10 குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும், 4 குற்றவாளியிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செப். 17ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை 560 கஞ்சா வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய ஐடி பெண்: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்
ராஜஸ்தானில் இருந்து ராணுவ அதிகாரி என்று கூறி கூகுள் பேவில் பெண்ணிடம் 1.60 லட்ச ரூபாய் சுருட்டல்
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: வாலிபர் கைது
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!