புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
2022-12-09@ 00:04:30

புதுடெல்லி: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி, கடந்த 2020ல் மாயமானார். போலீஸ் விசாரணையில், பஸ் ஸ்டாண்டில் பூக்கடை வைத்திருந்த ராஜா சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம், ராஜாவுக்கு 3 மரண தண்டனை, ஒரு ஆயுள், 2 ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்ததோடு, அரசு சார்பில் ₹5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.
இதே உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் உறுதி செய்திருந்தது. இந்நிலையில் ராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளிக்கான மரண தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைப்பதாகவும், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
அக்னி வீரர் பணியிடங்கள் முதலில் நுழைவு தேர்வு: ராணுவம் அறிவிப்பு
குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி
பைக் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி எதிரொலி: 22 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மாஜி இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மனைவி பரபரப்பு புகார்
உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேஷன் ஷோ: பார்வையாளர்கள் வரவேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!