இறுதி சடங்குக்கு நிதி; இறந்தவரின் உடலுக்கு ஒரு மாலை போதும்: ஊர்க்கூட்டத்தில் அதிரடி முடிவு
2022-12-08@ 15:28:35

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் ஊரில் யார் இறந்தாலும் ஒரே ஒரு மாலை மட்டும் தான் போட வேண்டும் என்று கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2ம் சேத்தி ஊராட்சியில் சாந்தான்வெளி, அகரம் பகுதியில் இறப்பவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வது மற்றும் மாலை போடுதல் தொடர்பாக சமீபத்தில் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் கூடி கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில் பொதுவாக இல்லங்களில் மரணம் ஏற்படும்போது கிராமத்தினர் சார்பில் ஒரு மாலை மட்டும் அணிவித்து இறுதி சடங்குகள் செய்வது, இறப்பு செய்தி அறிவிக்கும்போதே மாலையை தவிர்க்கவும் என ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும் என்றும் ஊர்மக்கள் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்துள்ளனர். மாலை வாங்க வசதியற்றோர் துயர நிகழ்வுக்கு வர இயலாத நிலையை தவிர்க்க வேண்டும், வசதிக்கு ஏற்றவாறு சிறியது முதல் பெரிய மாலைகள் போடும்போது ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை தவிர்ப்பதற்காக இந்த முடிவை அந்த கிராம மக்கள் எடுத்துள்ளனர்.
ஊர்மக்கள் சார்பில் இறந்தவருக்கு ஒரு மாலை மட்டுமே அணிவிக்க வேண்டும். டிரம்செட் வைக்க கூடாது. மாலைக்கு பதில் இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.200 வழங்க வேண்டும். அந்த தொகையில் இறுதிச்சடங்கை நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர். இதுபோன்று இறுதி சடங்கின்போது வசூல் செய்யப்படும் பணத்தை வசதி படைத்தோர் தங்களுக்கு இந்த பணம் வேண்டாம் என்று தவிர்க்கும்பட்சத்தில் அதை ஊரார்கள் ஒன்று சேர்ந்து ஏழ்மையான குடும்பத்தில் நிகழும் இறப்புக்கு செலவு செய்யப்படும் என்று முடிவெடுத்துள்ளனர். இறந்த நபர்களுக்கு மாலை போடும் விஷயத்தில் வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தினர் எடுத்த முடிவு இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!