தூத்துக்குடியில் கடும் பனிமூட்டம்; தரையிறங்க முடியாமல் சென்னை விமானம் திருவனந்தபுரம் சென்றது: 45 நிமிடங்கள் வானில் வட்டமிட்டதால் பீதி
2022-12-08@ 15:25:03

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடும் பனி மூட்டம் எதிரொலியாக சென்னையிலிருந்து வந்த விமானம் தரையிறங்க முடியாததால் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றது. இன்று காலை 6.45 மணி முதல் 7.30 மணி வரை விமான நிலையம் மேலே வட்டமிட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் 5 முறையும், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு 5 முறையும், தூத்துக்குடியிலிருந்து பெங்களூருவுக்கு 2 முறையும், பெங்களூருவிலிருந்து தூத்துக்குடி 2 முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்ட விமானம், காலை 6.45 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் அருகே வந்தது.
ஆனால் தூத்துக்குடியில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானம், நிலையத்திற்குள் தரையிறங்க சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து காலை 7.30 மணி வரை வானில் அந்த விமானம் வட்டமிட்ட படியே சிக்னலுக்காக காத்து நின்றது. ஆனால் பனி மூட்டம் விலகாததால் சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த விமானம் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் இருந்த மொத்தம் 39 பயணிகளும் பீதியடைந்தனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!