ஈரோடு சந்தையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய மாடுகள் விற்பனை: கர்நாடக வியாபாரிகள் வருகையால் விற்பனை படுஜோர்
2022-12-08@ 14:52:14

ஈரோடு : ஈரோடு மாட்டு சந்தைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக வியாபாரிகள் வருகை தந்திருப்பதால் மாடுகள் விற்பனை களைகட்டி உள்ளது. ஈரோடு கருங்கல் பாளையத்தில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று மாட்டு சந்தை நடைபெறுகிறது. இங்கு தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானா, மராட்டிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து செல்வது வழக்கம்.
ஆனால், கர்நாடகாவில் அண்மையில் மாடுகளுக்கு கோமாரி நோய் பரவியதால் அங்குள்ள மாட்டு சந்தைகள் மூடப்பட்டன. இதனால், கர்நாடக வியாபாரிகள் மாடுகள் வாங்க ஆர்வம் காட்டாமல் இருந்த நிலையில் தற்போது சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டு இருப்பதால் 2 மாதங்களுக்கு பிறகு ஈரோடு மாட்டு சந்தைக்கு கர்நாடக வியாபாரிகள் வருகை தந்துள்ளனர். இதனால், விற்பனை களைக்கட்டியுள்ளது.
ஈரோடு மாட்டு சந்தைக்கு விற்பனைக்காக 600 மாடுகள் கொண்டுவரப்பட்ட நிலையில் அவற்றுள் 85% மாடுகள் விற்பனையாகி இருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். பால் கொள்முதல் விலை உயர்வினால் கறவை மாடுகளை வளர்ப்பதற்காக வாங்கி செல்வோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாகவும், மாடுகள் ஒவ்வொன்றும் ரூ.30,000 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
களஆய்வில் முதலமைச்சர் திட்டம் துவக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் பயணம்: வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை
தேசிய கீதம் ஒலிக்கும்போது செல்போனில் பேசிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சவுதி அரேபியா கடலில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குமரி மீனவர் படுகாயம்
மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாடு எதிரொலி: ஓட்டல்களில் தங்குபவர்களின் விவரங்கள் புகை படங்களுடன் தெரிவிக்க வேண்டும்.! உரிமையாளர்களுக்கு டிஎஸ்பி உத்தரவு
திண்டிவனம் வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு
ஈரோடு இடைத்தேர்தல்; முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஆர்வம் காட்டிய சுயேட்சைகள்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!