சென்னை திருவெற்றியூரில் ஆண்டுக்கு ஒருமுறை கவசமின்றி காட்சியளிக்கும் ஆதிபுரீஸ்வரர்: மழையில் குடை பிடித்தபடி காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
2022-12-08@ 13:02:03

சென்னை : சென்னை திருவெற்றியூரில் ஆண்டுக்கு ஒருமுறை கவசமின்றி காட்சியளிக்கும் ஆதிபுரீஸ்வரரை காண கொட்டும் மழையில் திரண்ட பக்தர்கள் குடைபிடித்தபடி வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவெற்றியூர் தியாகராஜர் சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் புற்று வடிவில் உள்ள மூலர் ஆதிபுரீஸ்வரர் நாக கவசத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆதிபுரீஸ்வரரின் நாக கவசம் திறக்கும் விழா நடைபெறும்.
வாசுகி என்ற பாம்பிற்கு காட்சி கொடுப்பதற்காக சுயம்பு புற்று வடிவில் தோன்றிய ஆதிபுரீஸ்வரருக்கு அன்றைய தினம் தைலாபிஷேகம் நடத்தப்படும். கார்த்திகை மாதம் பௌவுர்ணமி நாளில் இருந்து 3 நாட்களுக்கு மட்டும் தங்கக்கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் காட்சியளிப்பார். அதன்படி நேற்று ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டிருக்கும் கவசம் திறக்கப்பட்டு மகாபிஷேகம் மற்றும் புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெற்றது. 2-ம் நாளான இன்று சாரல் மலையையும் பொருட்படுத்தாது குடை பிடித்தப்படி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி
இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
பிரபல இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!