மாண்டஸ் புயல் எதிரொலி!: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கடல் கொந்தளிப்பு.. வழக்கத்தை விட சுமார் 6 அடி உயரம் வரை அலைகள் சீற்றம்..!!
2022-12-08@ 12:11:13

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 580 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மாண்டஸ் புயலானது தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ளது. இந்த புயலானது மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் காரைக்காலுக்கு தென்கிழக்கே 600 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக கடற்கரைகளிலும், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் காற்றின் வேகம் இயல்பை விட கூடுதலாக இருக்கும் எனவும் புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயலால் தற்போது சென்னையில் கடல் அலைகள் சீற்றத்துடன் கொந்தளித்து வருகிறது. வழக்கத்தை விட சுமார் 6 அடி உயரம் வரை அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதால் சீற்றம் அதிகரித்திருக்கிறது.
கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தியதை தொடர்ந்து கடற்கரையில் மீன்பிடிப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மெரினா கடற்கரையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சிலர், கடல் அலையில் கால் நினைத்தும், செல்பி எடுத்தும் வருகின்றனர். கடலோர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புயல் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி
இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
பிரபல இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!