தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்
2022-12-08@ 00:03:43

நாமக்கல்: தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது என நாமக்கல்லில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 1000 பஸ்கள் வாங்க, ₹420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் நடைமுறையில் உள்ளது. பிற மாநிலங்களில் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும் கூட, தமிழகத்தில் உயர்த்தக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதே சமயம், நஷ்டத்தில் இருந்து போக்குவரத்துக் கழகங்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. தமிழகத்தில் டீசல் பஸ்களுக்கு பதிலாக, மின்சார பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது, என்றார். அருகில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடனிருந்தார்.
மேலும் செய்திகள்
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு பக்தர்கள் வெள்ளத்தில் ரதசப்தமி தீர்த்தவாரி
தேன் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வழக்கு: காதி வாரியம் பரிசீலிக்க உத்தரவு
நாஞ்சில் சம்பத்திடம் அமைச்சர் நலம் விசாரித்தார்
புதுவையில் 30, 31ம் தேதிகளில் ஜி20 மாநாட்டுக்காக 5 இடங்களில் 144 தடை
தர்மபுரி அருகே அட்டகாசம் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!