முதன்முறையாக கால்இறுதியில் மொராக்கோ
2022-12-07@ 15:01:53

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுன்ட் ஆப் 16 சுற்றில் நேற்றுநடந்த போட்டியில் ஸ்பெயின் (6வது ரேங்க்), மொராக்கோ (22வது ரேங்க் ) அணிகள் மோதின.ஆட்ட நேர முடிவிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தன.
இதன்பின் வெற்றியை தீர்மானிக்க ஆட்டம் கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை நீட்டிக்கப்பட்டது. ஆனால், இரு அணியும் கோல் அடிக்காததையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் மொராக்கோ 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. வெற்றிக்கு மொராக்கோ கோல்கீப்பர் 31 வயதான யாசின் பவுனோ முக்கிய பங்கு வகித்தார்.
பெனால்டி ஷூட் அவுட்டில் 3 முறை பெனால்டி கோல்களை தடுத்து வெற்றிக்கு உதவியது அவர்தான். அவரை சக வீரர்கள் தூக்கிப்போட்டு கொண்டாடினர். நடப்பு உலகக்கோப்பையில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வென்ற 2வது அணி மொராக்கோ. இந்த வெற்றி மூலம் நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு தகுதிபெற்ற ஒரே ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி என்ற சிறப்பை மொராக்கோ பெற்றுள்ளது.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு
3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி.! 6 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஆர்ச்சர்
மகளிர் டி 20 இறுதி போட்டி; இந்தியா தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
பறந்து வந்த பந்தை பாய்ந்து பிடித்த சூர்யகுமார்
சுப்மன் கில் தில்லான ஆட்டத்தால் நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா; அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!