மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வலுவுடன் உள்ளது; துரை வைகோ
2022-12-07@ 14:54:02

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை மதிமுக தலைமையும் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலினும் இணைந்து முடிவு செய்வர். 2024 நாடாளுமன்ற தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜ மதவாத சக்திகளை எதிர்க்கும் அனைத்து இயக்கங்களும் ஓரணியில் கூட்டணியாக திரள வேண்டும்.
தமிழக மக்களின் நலனுக்கு ஆளுநர் செயல்படவில்லை. தமிழகத்தில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வலுவோடு இருக்கிறது. இதில் மேலும் சில கட்சிகள், இயக்கங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கும்.
இவ்வாறு கூறினார்.
கும்பகோணத்தில் அம்பேத்கர் படத்துக்கு காவி உடை அணிவித்து நெற்றியில் விபூதி பூசியிருப்பதை போல இந்து மக்கள் கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டியது குறித்த கேள்விக்கு, இவர்கள் திருவள்ளுவரையும் விட்டு வைக்கவில்லை. அம்பேத்கர் ஜாதி, மத, இனம் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். ஆனால் இன்று அவரையும் விட்டு வைக்கவில்லை’’ என்று துரை வைகோ கூறினார்.
மேலும் செய்திகள்
3 வது பேனர் மாற்றம் அடி... இடி மாறி விழுந்து இருக்கு போல!
வேட்டியை மடிச்சு கட்டினா... அன்புமணி எச்சரிக்கை
‘இரட்டை இலை எங்ககிட்டதான் இருக்கு’ ஓபிஎஸ் அணி
ரூ.3,690 செருப்பு என்னுது... இந்தா பிடிங்க பில்லு...
பெரியார் மண் விற்பனைக்கு அல்ல: ஈரோட்டை கலக்கும் போஸ்டர்
தவில் இசைத்து அமைச்சர் பிரசாரம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!