ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு..!
2022-12-07@ 10:39:33

டெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35% ரிசர்வ் வங்கி உயர்த்தியது. ரிசர்வ் வங்கி 2 ஆண்டுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை சீராய்வு கூட்டம் நடத்தி வட்டி விகிதம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகளை எடுக்கிறது. எந்த வகையில் கடந்த 5ம் தேதி முதல் 7ம் தேதிவரை நிதிக் கொள்கை சீராய்வு கூட்டம் நடந்தது. இதில் நாட்டின் பணவீக்கம் உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்; வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35% ரிசர்வ் வங்கி உயர்த்தியது.
வட்டி விகிதம் உயர்ந்ததை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25% ஆக அதிகரித்துள்ளது. வட்டி விகித உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. நாட்டில் பண வீக்கம் அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என விளக்கம் அளித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயரக்கூடும். இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்புத்திறன் கொண்டதாகவே உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரின் விளைவாக சர்வதேச விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என கூறினார்.
மேலும் செய்திகள்
நகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி... இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை!: சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.42,704க்கு விற்பனை..!!
அதானி குழுமம் நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் செய்துள்ள முதலீடுகளால் நஷ்டம் இல்லை: எல்.ஐ.சி. நிறுவனம் விளக்கம்
தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு ஒரு சவரன் ரூ.42,800க்கு விற்பனை: பொதுமக்கள் கலக்கம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.42,800க்கு விற்பனை
அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை திடீர் சரிவு: சவரனுக்கு ரூ.280 குறைந்தது
நிதி முறைகேடு, போலி பரிவர்த்தனை அறிக்கை எதிரொலி; 2வது நாளாக அதானி குழும பங்குகள் வீழ்ச்சி: ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!