வேலூர் மாநகராட்சியில் தரமற்ற சாலை உதவி பொறியாளர் சஸ்பெண்ட்
2022-12-07@ 00:05:44

வேலூர்: வேலூர் அடுத்த அரியூர் பகுதியில் அன்னை கஸ்தூரிபாய் தெருவில் கடந்த 1ம் தேதி தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த சாலை தரமற்ற முறையில், தாருடன் ஜல்லிகற்கள் ஒட்டாமல் நடக்கும்போதே பெயர்ந்து வரும் நிலையில் இருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சாலையில் இருந்து வெறும் கைகளால் ஜல்லிக்கற்களை அள்ளிக் கொட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. மாநகராட்சி ஆணையாளர் அசோக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் விசாரித்தபோது, மழை பெய்ததால் சில அடி தூரம் சாலையில் தாருடன் ஜல்லிக்கற்கள் ஒட்டாத நிலை இருந்துள்ளது. அதை 4வது மண்டல மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் சரியாக கவனிக்காததால் அவரை சஸ்பெண்ட் செய்து ஆணையாளர் உத்தரவிட்டார். மேலும் அந்த பகுதியில் உடனடியாக புதிய சாலை அமைக்கப்பட்டது.
Tags:
Vellore Corporation Bad Road Assistant Engineer Suspended வேலூர் மாநகராட்சி தரமற்ற சாலை உதவி பொறியாளர் சஸ்பெண்ட்மேலும் செய்திகள்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா
தண்ணீர் வரத்து குறைந்ததால் கவியருவி மூடப்பட்டது
கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது; களக்காடு பகுதியில் 20 வகையான நீர் பறவைகள்
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்
தாளவாடி மலைப் பகுதியில் மின் கம்பத்தை சேதப்படுத்திய காட்டு யானை: சிசிடிவி வீடியோ பரபரப்பு காட்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!