ஒரே நாளில் தங்கம் விலை ரூ.232 உயர்வு
2022-12-06@ 01:01:09

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.232 உயர்ந்தது. இது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும், அதே நேரத்தில் அதிரடியாக குறைந்தும் வந்தது. 2ம் தேதி தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,160க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. மேலும் தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 அளவுக்கு உயர்ந்தது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. 3ம் தேதி தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.5,016க்கும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் ரூ.40,128க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் (ஞாற்றுக்கிழமை) என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், சனிக்கிழமை விலையிலேயே ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை அதிகரித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.29 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,045க்கும், சவரனுக்கு ரூ.232 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,360க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிகரித்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகள்
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி
இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
பிரபல இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!