ஆந்திராவில் அரசுக்கு எதிராக விவசாய பேரணி பவன் கல்யாண் கட்சி நிர்வாகி வீட்டை ஆளும் கட்சியினர் சூறை
2022-12-06@ 00:28:06

திருமலை: அரசுக்கு எதிராக விவசாய பேரணி நடத்தப்போவதாக தெரிவித்த பவன் கல்யாண் கட்சி நிர்வாகி வீட்டை ஆளும் கட்சியினர் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூரை சேர்ந்தவர் ராமச்சந்திர யாதவ். இவர் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் முக்கிய நிர்வாகி. ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி பேரணி நடத்தப் போவதாக ராமச்சந்திரயாதவ் அறிவித்திருந்தார். மேலும், அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டியை கடுமையாக விமர்சித்திருந்தார். நேற்று பேரணி நடக்க இருந்த நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கற்கள், கத்திகள் மற்றும் கம்பிகளுடன் புங்கனூரில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த சூறையடினர். இதனால், விவசாய பேரணியை ஒத்திவைப்பதாக ராமசந்திரயாதவ் அறிவித்தார்.
Tags:
Andhra Govt Agriculture Rally Pawan Kalyan Party Executive House Ruling Party Surai ஆந்திரா அரசு விவசாய பேரணி பவன் கல்யாண் கட்சி நிர்வாகி வீட்டை ஆளும் கட்சியினர் சூறைமேலும் செய்திகள்
மோடி குறித்த ஆவணப்பட விவகாரம்: ‘பிபிசி’ தகவல் யுத்தத்தை நடத்துகிறது! ரஷ்ய வெளியுறவு அதிகாரி கண்டனம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்
வனப்பகுதியில் பதுங்கியிருந்த 4 லஷ்கர் தீவிரவாதிகள் கைது
அபுதாபி டூ மும்பை வந்த விமானத்தில் இத்தாலி பெண் பயணி போதையில் ரகளை: ஊழியர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு
அடுக்குமாடி சுவர் இடிந்து விழும் முன் எலி உருட்டியதால் 5 பேரின் உயிர் தப்பியது: ராஜஸ்தானில் விநோதம்
காவல் நிலையம் முன் அமர்ந்து கொண்டு ‘ஹூக்கா’ புகைத்து ‘ரீல்’ வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!