நாடாளுமன்ற குளிர்கால தொடர் நாளை தொடக்கம்: இன்று அனைத்து கட்சி கூட்டம்
2022-12-06@ 00:27:23

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளதைத் தொடர்ந்து, இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி வரும் 29ம் தேதி வரை 23 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இதன் 17 அமர்வுகளில், 16 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து கட்சி எம்பிக்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இன்று மாலை அலுவல் ஆய்வுக்குழு கூட்டமும் நடத்தப்பட உள்ளது. இதில் மக்களவை அலுவல்கள் குறித்தும், அவையில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.
Tags:
Parliamentary Winter Session Tomorrow Commencement Today All Party Meeting நாடாளுமன்ற குளிர்கால தொடர் நாளை தொடக்கம் இன்று அனைத்து கட்சி கூட்டம்மேலும் செய்திகள்
அக்னி வீரர் பணியிடங்கள் முதலில் நுழைவு தேர்வு: ராணுவம் அறிவிப்பு
குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி
பைக் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி எதிரொலி: 22 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மாஜி இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மனைவி பரபரப்பு புகார்
உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேஷன் ஷோ: பார்வையாளர்கள் வரவேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!