பட்டாக்கத்தியுடன் ரகளை ரவுடி சுற்றிவளைத்து கைது
2022-12-06@ 00:25:16

அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர் (38). இவர், அண்ணாநகர் 4வது மெயின் ரோட்டில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு, இவரது கடைக்கு போதையில் பட்டா கத்தியுடன் வந்த 5 பேர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர், தர மறுத்ததால் சரமாரியாக தாக்கியதோடு, கத்தியால் வெட்ட முயன்றனர். பின்னர், அவ்வழியாக சென்ற பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை வெட்ட முயன்றனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து புகாரின்பேரில், அண்ணாநகர் போலீசார் வழக்குபதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து, அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் தொடர்புடைய ஒரு ரவுடியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர். இவர்கள் கத்தியுடன் ரகளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: வாலிபர் கைது
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!