டெய்லரை தாக்கி பணம் பறித்த சிறுவர்கள் கைது
2022-12-06@ 00:23:12

பெரம்பூர்: புளியந்தோப்பில் டெய்லரை கட்டையால் அடித்து பணம் பறித்த வழக்கில் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பு திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் பாபு (50). இவர், புளியந்தோப்பு ஜாபர்கான் தெருவில் டெய்லர் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து புளியந்தோப்பு நாச்சாரம்மாள் தெரு வழியாக செல்லும்போது இவரை வழிமறித்த 3 நபர்கள் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஷேக் பாபு பணம் இல்லை என்று கூறியவுடன் அருகில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக அடித்தனர். கட்டையில் இருந்த ஆணி பலமாக ஷேக் பாபுவின் தலையில் பட்டு ரத்த காயம் ஏற்பட்டது.
அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலை மற்றும் மார்பில் தையல்கள் போடப்பட்டது. இதுகுறித்து, புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சென்னை கன்னிகாபுரம் வாசகி நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (20) மற்றும் புளியந்தோப்பு ஜேஜே நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஞ்சயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும், சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள்
ராஜஸ்தானில் இருந்து ராணுவ அதிகாரி என்று கூறி கூகுள் பேவில் பெண்ணிடம் 1.60 லட்ச ரூபாய் சுருட்டல்
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: வாலிபர் கைது
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!