சிறுமியை கடத்தி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது
2022-12-05@ 18:49:46

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூரை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் ஜெயக்குமார்(22) கூலி தொழிலாளி. இவர், 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியை பைக்கில் கடத்திச் சென்று புதுக்குடி கரைமேடு பகுதியில் முந்திரி காட்டில் உள்ள தனி வீட்டில் வைத்து கடந்த 10 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அவரது தாயும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமியை கடந்த 10 நாட்களாக காணவில்லை என பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் 10 நாட்கள் கழித்து தனது மகள் தானாக வீட்டிற்கு வந்தார். சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது அந்த சிறுமி நடந்ததை கூறி அழுதுள்ளார். இது பற்றி சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஜெயக்குமார் மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் சாந்தி ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: வாலிபர் கைது
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!