வரத்து குறைவால் ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி
2022-12-05@ 12:59:58

ஓசூர் : பனிப்பொழிவால் சாகுபடி குறைந்ததால், ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல சீதோஷ்ண நிலை காணப்படுவதால், சாமந்தி, ரோஜா, பட்டர் ரோஸ், மேரிகோல்டு உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு உள்ளன. இங்கு விளையும் பூக்கள், ஓசூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழையால் ஓசூர் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்தது.
இதனால் ஒரு கிலோ சாமந்தி ₹20 முதல் 30க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று வரத்து குறைந்த நிலையில், ஒரு கிலோ சாமந்தி ₹100க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், கடந்த வாரம் பட்டன் ரோஸ் கிலோ ₹10 முதல் 20க்கு விற்ற நிலையில், நேற்று ₹140-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை ₹1,000-க்கும், கனகாம்பரம் ₹800 முதல் 1,000க்கும் விற்கப்பட்டது. ஓசூர் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக, சாகுபடி குறைந்து மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து சரிந்துள்ளது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!