ஈரோடு மாநகரில் பலத்த மழை-வாகன ஓட்டிகள் அவதி
2022-12-05@ 12:46:58

ஈரோடு : ஈரோடு நகரில் நேற்று மதியம் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் இதமான சூழல் நிலவியது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாள்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில், கடந்த 4 நாள்களாக ஈரோடு நகரில் மழை இல்லாத நிலையில், நேற்று அதிகாலையில் லேசான சாரல் மழை பெய்தது. அதைத் தொடர்ந்து லேசான வெயிலுடன் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து பிற்பகலில் வெயில் தகித்த நிலையில், மதியம் 2 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று விசியது. பின்னர் 2.30 மணியளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் நகரின் பிரதான பகுதிகளான முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, பிரப் சாலை, மணிக்கூண்டு, மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சத்தி சாலையில் விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில், தொடர்ந்து, விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் இதமான சூழலை ஈரோடு மாநகர மக்கள் அனுபவித்தனர்.
மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!