தமிழகத்தில் அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது: ஜெ.தீபா பரபரப்பு பேட்டி
2022-12-05@ 12:26:29

சென்னை: தமிழகத்தில் அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைப்படி சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவில் 4 அணிகள் இல்லை; 4 பேர் தான். இபிஎஸ் தலைமையிலான அதிமுக சரியாக செயல்படவில்லை. ஜெயலலிதா போன்று அதிமுகவை வழிநடத்த தலைவர்கள் இல்லை.
இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா என யாருக்கும் அதிமுகவை வழிநடத்தும் தகுதியில்லை. என்னுடைய மறைவுக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் இந்த கட்சி இருக்கும் என ஜெயலலிதா கூறினார். ஆனால், அதிமுக என்ற கட்சி 100 நாட்கள் கூட இருக்காது என தோன்றுகிறது. தங்களின் சுயநலத்திற்காக அதிமுகவை பயன்படுத்தி வருகின்றனர். பதவியை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அதிமுக தலைவர்கள் உள்ளனர். அதிமுகவுடன் அந்த சம்பந்தமும் இல்லை என விலகி நிற்கிறேன். நான் மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை. ஒட்டுமொத்த அரசியல் வாழ்வும் பிடிக்காததால் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
ஜனாதிபதியின் உரைக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு
நீதிபதி ரோகிணி ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
தோழமை அடிப்படையில் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம்... மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
2 யூடியூப் சேனல்கள் மீது சரத்குமார் புகார்
இருள் விலகட்டும், இந்தியா விடியட்டும் எத்திசையும் அண்ணா எனும் பேரொளி பரவட்டும்: நினைவு நாளான 3ம் தேதி திமுகவினர் அமைதிப் பேரணி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!