டெல்லியில் காற்று மாசு மீண்டும் அதிகரிப்பு: கட்டுமான பணிகள், கட்டட இடிப்பு பணிகளுக்கு கட்டுப்பாடு..!!
2022-12-05@ 10:19:53

டெல்லி: அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியாக தலைநகர் டெல்லியில் கட்டுமான பணிகள், கட்டட இடிப்பு பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி முழுவதும் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையை தாண்டி அபாய அளவை எட்டி இருக்கிறது. இதனால் அதிகாலை நேரங்களில் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களை இயக்குவதிலும், சுவாசிப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த காற்று தர மேலாண்மை ஆணையம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி மற்றும் தேச நலனுக்கான அத்தியாவசிய கட்டட பணிகள் தவிர்த்து பிற கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மெட்ரோ ரயில் சேவை பணிகள், விமான நிலையம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து முனையங்கள் சார்ந்த கட்டுமான பணிகளுக்கு தடை உத்தரவு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சியில் பயங்கரம் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது: விமானி பலி; 2 பேர் காயங்களுடன் மீட்பு
இறுதிகட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் நடைபயணம் இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் நாளை பொதுக்கூட்டம்
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி புதிய மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
சமூக ஊடகங்கள் மீதான புகாரை விசாரிக்க 3 மேல்முறையீடு குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு: முழுநேர உறுப்பினராக அசுதோஷ்சுக்லா ஐபிஎஸ் நியமனம்
தினமும் ரூ.500 சம்பாதிக்கும் சாலையோர வியாபாரிக்கு ரூ.366 கோடி ஜிஎஸ்டி வரி
ஜார்கண்டில் தனியார் மருத்துவமனையில் தீ டாக்டர் தம்பதி உட்பட 5 பேர் பலி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!