விபத்தில் மூளைச்சாவு வாலிபர் உறுப்புகள் தானம்
2022-12-05@ 03:54:12

சேலம்: சேலம் மாவட்டம், மல்லூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (26). பி.காம்., பட்டதாரி. சேலம் சேகோ சர்வில் வேலை செய்து வந்தார். கடந்த 30ம் தேதி இரவு பணி முடிந்து, வீட்டுக்கு டூவீலரில் சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது உறுப்புகளை தானம் செய்ய தந்தை முருகன் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை அறுவை சிசிக்சை மூலம் எடுக்கப்பட்டன. இதில் இதயம் மற்றும் நுரையீரல் சென்னைக்கும், கல்லீரல் கோவைக்கும், ஒரு சிறுநீரகம் ஈரோட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகமும், இரு கண்களும், சேலம் அரசு மருத்துவமனையிலேயே நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!