தமிழகத்தில் ஆபரேசன் புதுவாழ்வு மூலம் 1,800 பிச்சைக்காரர்கள் கைது: முதலிடத்தில் தாம்பரம்
2022-12-05@ 03:34:34

சென்னை: தமிழகம் முழுவதும் ‘ஆபரேசன் புதுவாழ்வு’ என்ற பெயரில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் சாலைகளில் சுற்றி திரிந்த1,800 பிச்சைக்காரர்களை காவல்துறை யினர் கைது செய்தனர். தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காவல்துறையால் கடந்த 3ம்தேதி காலை முதல் ‘ஆபரேசன் புதுவாழ்வு’ என்ற பெயரில் அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.
இதில் சாலைகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 1,800 பிச்சைக்காரர்களை போலீசார் கைது செய்தனர். அதில் 255 பேர் அரசு இல்லங்களிலும், 953 பேர் அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவன இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர். 367 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ் 108 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதில்அதிகபட்சமாக தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 207 பேர், சேலம் மாவட்ட த்தில் 122 பேர் சிக்கினர். குழந்தைகளை, பிச்சைகாரர்களாக்கி அவர்களை நகர் புறங்களில் பிச்சை எடுக்க வைக்கும் ஆள்கடத்தல் கும்பல் பற்றி 044-28447701 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி
இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
பிரபல இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!