2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு பல லட்சம் பேர் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்
2022-12-05@ 03:30:26

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வில் பல லட்சம் ேபர் பங்கேற்று ஆர்வமுடன் தேர்வு எழுதினர். தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி அரசு வெளியிட்டது. அதாவது அந்தந்த மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்கள் குறித்த அறிவிப்பை அந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்தனர்.
இப்பதவிக்கு விண்ணப்பங்கள் நவம்பர் 7ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வி தகுதியாக 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு மாநிலம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு விண்ணப்பித்திருந்தனர். எழுத்து மற்றும் வாசித்தல் தேர்வு நவம்பர் 30ம் தேதிக்கு பதிலாக தேர்வு தேதி 4ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து மற்றும் வாசித்தல் தேர்வு நடைபெற்றது. சென்னையை பொறுத்தவரை 12 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்து மற்றும் வாசித்தல் தேர்வு மாதவரம், திருவொற்றியூர், பெரம்பூர், ஆலந்தூர், எழும்பூர் உள்பட 9 வட்டங்களில் நடந்தது. மாநிலம் முழுவதும் நடந்த தேர்வில் பல லட்சம் பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
வாசித்தல் தேர்வில், ஏதாவது ஒரு புத்தகத்தில் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரர் வாசிக்க சொல்லும் வகையில் இருந்தது. இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. எழுத்து தேர்வில் ஏதாவது ஒரு தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுதும் வகையில் இடம் பெற்று இருந்தது. இந்த எழுத்து தேர்வை கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வு நடந்த மையங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.
தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து வருகிற 15ம் தேதி மற்றும் 16ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வருகிற 19ம் தேதி வெளியிடப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி
இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
பிரபல இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!