கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்க தனி ஏடிஎம்: ஐதராபாத்தில் திறப்பு
2022-12-05@ 03:19:04

திருமலை: நாட்டிலேயே முதல் முறையாக ஐதராபாத்தில் கார்டுகளை ஸ்வைப் செய்து தங்கம் வாங்கும் ஏடிஎம் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நாட்டிலேயே முதல் தங்க ஏடிஎம் இயந்திரத்தை தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பொதுமக்கள் தங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் தங்கம் வாங்கலாம். 99.99 சதவீத தூய்மையுடன் 0.5 மற்றும் 1,2,5,10,20,50 மற்றும் 100 கிராம் தங்க நாணயங்களை தங்க ஏடிஎம் மூலம் எடுக்கலாம். தங்கத்தின் தரம் மற்றும் உத்தரவாதம் குறித்த ஆவணங்களும் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெலங்கானா மாநில மகளிர் ஆணைய தலைவர் சுனிதா லட்சுமரெட்டி கூறுகையில், ‘ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கும் வசதி சாதாரண மக்களுக்கும், பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.
மேலும் செய்திகள்
அக்னி வீரர் பணியிடங்கள் முதலில் நுழைவு தேர்வு: ராணுவம் அறிவிப்பு
குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி
பைக் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி எதிரொலி: 22 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மாஜி இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மனைவி பரபரப்பு புகார்
உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேஷன் ஷோ: பார்வையாளர்கள் வரவேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!