வெஸ்ட் இண்டீசுடன் முதல் டெஸ்ட்: 164 ரன் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி; பந்துவீச்சில் லயன் அசத்தல்
2022-12-05@ 03:15:42

பெர்த்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா 164 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. பெர்த் ஸ்டேடியத்தில் நவ.30ம் தேதி தொடங்கி நடந்து வந்த முதல் டெஸ்டில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 598 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கவாஜா 65, லாபுஷேன் 204, ஸ்மித் 200*, ஹெட் 99* ரன் விளாசினர்.
வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 283 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 315 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸி. 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன் என்ற ஸ்ல்கோருடன் மீண்டும் டிக்ளேர் செய்தது. வார்னர் 48, லாபுஷேன் 104*, ஸ்மித் 20* ரன் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 498 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 4ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்திருந்தது.
நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணி 333 ரன்னுக்கு ஆட்டமிழந்தது (110.5 ஓவர்). கேப்டன் பிராத்வெய்ட் 110, தேஜ்நரைன் சந்தர்பால் 45, ரோஸ்டன் சேஸ் 55, அல்ஜாரி ஜோசப் 43 ரன் எடுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் நாதன் லயன் 42.5 ஓவரில் 128 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். ஹெட் 2, ஸ்டார்க், ஹேசல்வுட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸி. அணி 164 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. லாபுஷேன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2வது மற்றும் கடைசி டெஸ்ட் அடிலெய்டில் 8ம் தேதி தொடங்குகிறது.
மேலும் செய்திகள்
மகளிர் உலக கோப்பை டி20; பயிற்சி ஆட்டங்கள் நாளை தொடக்கம்
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் பைனலில் சுரென்கோ
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; அரையிறுதியில் சவுராஷ்டிரா
குண்டுவெடிக்கும் பாகிஸ்தானில் எப்படி போட்டி நடத்த முடியும்?... பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கேள்வி
பாக். வீரர் ஷாகித் அப்ரிடி மகளுடன் ஷாகின்ஷா அப்ரிடி திருமணம்
டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி உள்ளார்; இந்திய அணியின் முதுகெலும்பு ஸ்ரேயாஸ் அய்யர்தான்: அஸ்வின் சொல்கிறார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!